வன்னியில் தொடரும் தமிழின அழிப்பு தாக்குதல்: 29 தமிழர்கள் படுகொலை.

வன்னியில் சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக நடத்தி வரும் தமிழின அழிப்புத் தாக்குதலில் 29 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 31 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை மற்றும் வலைஞர்மடம் பகுதிகளில் இன்று சனிக்கிழமை காலை தொடக்கம் மாலை வரை சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார், பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை நடத்தினர்.

இதில் 29 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 31 பேர் படுகாயமடைந்துள்ளனர்.










Source(Puthinam)

0 comments: